விடுதலைக்காய் எல்லைகள் தாண்டி இணையும் கைகள்
9 ஜனவரி 2013யில் பாரிஸ் நகரில் படுகொலை செய்யப்பட்ட 3 பெண் குர்திஸ்தான் அரசியல் செயல்பாட்டாளர்களின் ஒர் ஆண்டு நினைவு இன்று நடைபெற்றது. 50,000க்கும் மேற்பட்ட மக்கள் எழுச்சியுடன் பங்குபற்றிய இந்த ஊர்வலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,அரசியல்கட்சி தலைவர்கள், … Continue reading
தற்கொலைகளும் சமூகத்தின் தோல்வியும்
அண்மையில் லண்டனில் தமிழ் பெண் ஒருவர் தனது 7மாத குழந்தையையும் 5வயது மகனையும் கொன்றபின்னர் தானும் தற்கொலைசெய்து கொண்டுள்ளார். கென்ரன் எனும் பகுதியில் 33வயதேயான இந்த பெண் தனது பிள்ளைகள் கணவருடன் வசித்து வந்திருக்கிறார். இவர்களது வீட்டில் அடிக்கடி … Continue reading
ஐநாவும் குற்றவாளிகளும்
அமெரிக்காவின் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்யப்பட்ட இந்திய ராஜதந்திரியை முறையற்றவிதத்தில் கையாண்டது ஒரு புறம் நடைபெற்றதென்றால், மறுபக்கம் இந்திய டெல்லி அரசு அவசரம் அவசரமாய் அந்த ராஜதந்திரியை ஐக்கிய நாடுகள் சபையின் பதவிக்கு அமர்த்தியது அரங்கேறியது. … Continue reading
இனபடுகொலை பற்றிய தீர்ப்பாயம்
60 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் மீது நடந்துகொண்டிருக்கும் இன அழிப்பை யேர்மனியில் நடைபெற்ற தீர்பாயத்தில் ஆராய்ந்து தீர்ப்பு வெளிவந்துள்ளது.அதில் பங்கு பற்றிய மே 17 அமைப்பை சேர்ந்த திருமுருகன் அது பற்றி உரையாடிய பொழுது.
இவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்
சிவகுமார் – பேரின்பவதனி தம்பதியினர் ஜெர்மனியினில் வசித்துவருகிறார்கள். புலம்பெயர் தமிழர்களான இவர்கள், தமது பிறந்த தினத்தினை வன்னியினில் யுத்த அவலங்களுடன் வாழும் குடும்பமொன்றிற்கு கைகொடுத்ததன் மூலம் கொண்டாடியுள்ளனர். கால்கள் இரண்டும் செயலிழந்த நிலையினில் தள்ளுவண்டில் மூலமே … Continue reading
கனடாவில் மாவீரர் நாள்
வழமை போல் இந்த வருடமும் கனேடிய தமிழ் மக்கள் பெரு எழுச்சி கொண்டு மாவீரர்களை நினைவு கூர்ந்தார்கள். மார்க்கம் நகரில் அமைந்திருந்த மாவீரர் நினைவு மையத்திற்கு வரும்வீதிகள் எல்லாம் தமிழர்களின் … Continue reading
சனல்4 மீதான தாக்குதல்
இலங்கையில் தொடரும் தமிழர் மீதான இனப்படுகொலையும் அதைபற்றி இங்கிலாந்தை சேர்ந்த சனல் 4 நிறுவனத்தின் தொடர் உண்மை வெளிக்கொணர் காணொளிகள் வெளிவந்ததும் அதையடுத்து சனல் 4 மீது நன்றி பாராட்டிய தமிழர்களும் வெறுப்புகாட்டிய சிங்களவர்களும் … Continue reading
தமிழர் நலன் காக்கபடாவிட்டால் நடவடிக்கை-மொரீசிய பிரதமர்
இறுதிக்கட்ட போரில் தமிழருக்கு இழைக்கபட்ட கொடுமைகளும், போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியும் தமிழ் மக்கள் வாழ்க்கையில் எதுவித மாற்றமும் ஏற்படாததையிட்டு கவலைகொண்டும் மொரிசியஸ் பிரதமர் (நவீன் ராம்கூலம்)பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணித்து தெரிந்ததே. சனல் 4 தொலைக்கட்சி சேவைக்கு அளித்த … Continue reading
இலங்கையை புறக்கணிக்கும் நாடுகள்
இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிப்பவர்கள் அணியில் தற்போது மொரீசியஸ் நாடும் இணைந்து கொள்கிறது. மொரிஷியஸ் நாட்டின் பிரதமர் பொதுநவலாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவித்துள்ளார்.தமிழ் தேசிய மக்கள் முன்னணி … Continue reading
நன்றிசெலுத்த அணிதிரள்வோம்
வருகின்ற ஒக்டோபர் 28 திகதி கனேடிய தமிழர் சமூகம் மீண்டும் அணிதிரள்கிறது தமது பாராளுமன்றை நோக்கி. இம்முறை தமிழர்கள் ,நன்றி செலுத்தும் முகமாக ஒன்றினைகிறார்கள். கடந்த 30 மாதங்களாக மதிப்புக்குரிய கனேடிய பிரதமர் ஸ்ரிபன் கார்ப்பரின் நகர்வுகள்,தமிழர்க்கு ஆதரவளிப்பதாயும் தமிழர் தம் தேசியவிடுதலையில் மாற்றுதலை உண்டாக்குபவையாகவும் அமைந்து … Continue reading
தமிழருடன் தமிழ் பேசுவோம்
தமிழ் என்றும் சாகா, என்றும் தமிழருடன் தமிழில் மட்டும் பேசுவோம். இந்த குறும்படம் ‘தமிழ்’ மீது பற்றுக்கொண்ட ஒருவரால் உருவாக்கபட்டாலும், இது வெறுமனே ஒரு கவலையே. புலம்பெயர் தேசம் எங்கும் சங்கம் அமைத்து சிறுபிள்ளைகள் தமிழ் பயின்று வருகின்றார்கள். தமிழ் பேசும் … Continue reading
ரொரன்ரோ மூழ்கியது
ரொரன்ரோவை மூழ்கடித்த வெள்ளம். நிலக்கீழ் இரயில் பாதை வெள்ளத்தில் மூழ்கியது. மாலை 5 மணிக்கு வேலை முடிந்து வீதியை அடைந்தோர் இரவு 11மணியாகியும் இன்னும் வீடு சென்று சேரமுடியாமல் நடுவீதியில். வெள்ளத்தில் மாட்டுபட்டGO இரயில் இருந்து 1200பேரை மீட்கும் பணி இன்னும் … Continue reading
Tamils protest in london
Video streaming by Ustream லண்டனில் தொடரும் போராட்டம் நேரலையில் பார்வையிடலாம்
தமிழர்கள் தாக்கப்பட்டார்கள்
லண்டனில் அவுஸ்திரேலியாவிற்கும், சிறீலங்காவிற்கும் இடையில் துடுப்பெடுத்தாட்டப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது வெளியில் ஈழத்தமிழர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் நிகழ்த்தப்பட்டது. சிறீலங்கா துடுப்பெடுத்தாட்ட அணியைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மேற்படி ஈழத்தமிழர்கள் மீது துடுப்பாட்ட போட்டியை காணவென வந்திருந்த ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் வன்முறையை ஏவியுள்ளார்கள். முள்ளிவாய்க்கால் பெருந்துயரத்திற்கு பின் முக்கியமானவை … Continue reading
முள்ளிவாய்க்கால் முடிந்துபோனதா
கனடாவின் ஒன்ராரியோ பாராளுமன்ற முன்றலில் இன்று முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவுகூரல் இடம்பெற்றது. பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்ட இந்நாளில் கனெடிய தமிழர்கள் மீண்டும் தமிழ் தேசத்தை மீட்டெடுப்பதற்கான உறுதியை எடுத்தார்கள்
டென்மார்க் கரிசனை
டென்மார்க்கின் ஆளும் சோசலிச கட்சியினதும் மற்றும் டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தினதும் ஏற்பாட்டில் மறக்கப்பட்ட மோதுகை (The Forgotten Conflict) என்ற தொனிப்பொருளில் இலங்கைத் தீவில் மனித உரிமை என்ற மாநாடு இன்று டென்மார்க் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. ஆளும் சோசலிச கட்சியின் … Continue reading
லண்டனில் தமிழர் பேரணி
ஐக்கிய நாடுகள் சபையால் சுதந்திர ஈழத்திற்கான வாக்கெடுப்பு நடத்தபடவேண்டும் என வேண்டி லண்டன் வாழ் தமிழர்கள் வெள்ளியன்று ஒன்றுதிரண்டனர். தமிழ் நாட்டு மாணவர்களுடன் இவ்விதபோராட்டங்களூடாய் தோளோடு தோள் இணையும் லண்டன் வாழ்தமிழர் , தமிழக சட்டசபையினால் ‘சுதந்திர ஈழத்திற்கான வாக்கெடுப்பு’ நடத்தபடவேண்டி … Continue reading
பிரான்ஸ் மக்கள் பேரவையின் வேண்டுகோள்
அன்பார்ந்த தமிழ் உறவுகளே! சிறிலங்கா அரசுக்கு எதிரான தன்னெழுச்சியான மாணவர்கள் போராட்டம் தமிழகத்தையே உலுப்பிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அயல் மாநிலங்களையும் ஏன் இந்திய அளவில் கூட இந்த மாணவர்கள் போராட்டம் பற்றிக்கொள்ளத்தொடங்கியிருக்கிறது. முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் விடுதலைப்போராட்டததையும் தமிழினவழிப்புப்போரில் சேர்த்துப் புதைத்துவிட்டதாக மார்புதட்டி இறுமாப்போடு … Continue reading
பனிப்புயலுக்கு மத்தியில் இசைமழை
ரொரன்ரோவில் வீசும் கடும் பனிப்புயலுக்கும் மத்தியில் இசையானியின் இசைமழை சற்றுமுன்னே ஆரம்பமாகியது. கடுமையாய் வீசும் பனிப்புயலால் நகரின் பல பகுதியிலும் வாகன விபத்துகள் நிகழ்ந்துள்ளன. மோசமான காலநிலைக்கு மத்தியிலும் எம்மவர்கள் இசையானியின் இசைமழைக்காய் திரண்டுள்ளார்கள். பலத்த எதிர்பார்ப்புகளை உருவாக்கிய இளையராயாவின் எங்கேயும் … Continue reading
விடுதலை வேள்வியில்…… ஆகுதியானவன்
நான்கு வருடங்களுக்கு முன்பாக கொத்து கொத்தாக எம்மக்கள் கொன்றழிக்கபட்ட பொழுது அதை தடுப்பதற்காய் ஆயிரம் ஆயிரம் வீரமறவர்கள் உலமே சேர்ந்து மூட்டிய தீ மழைக்குள் நின்று போரிட்டார்கள். தமிழகத்திலும் புலத்திலும் அழிவை தடுப்பதற்கு வழியறியா லட்சோப லட்ச தமிழ் மக்கள் விம்மி … Continue reading
குர்திஸ்தான் போராளிகளுக்கு பிரான்சு தமிழீழ மக்கள் வீரவணக்கம்
குர்திஸ்தான் மக்கள் தமிழீழ விடுதலை போராட்டத்தில் உயர்ந்த மரியாதையை கொண்டவர்கள், தமிழ் மக்களின் அறப்பணியில், தமிழர்களின் போராட்டத்தில் பல வழிகளில் ஒன்றிணைந்தவர்கள் . பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையும், தமிழர்களின் அனைத்து கட்டமைப்புக்களும் பல கட்டங்களில் பல போராட்டங்களில் குர்திஸ்தான் மக்கள் அமைப்புகளுடன்ஒன்றிணைந்து செயலாற்றியுள்ளார்கள். … Continue reading
ஈழத்தவர் நாடுகடத்தப்படலாமா-CBC
அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் இலங்கை அரசபாதுகாப்புபடைகளால் சித்திரவதைக்கும், கொலைக்கும் உள்ளாகும் ஆபத்து. இது பற்றி Anna Maria Tremonti கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ,காலை பதிவு the current ல் அலசினார். ஒலிப்பதிவு இங்கேCURRENT@CBC