எவனோ ஒருவன் வாசிக்கிறான்…….
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்!
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்…….
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்!
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை……!
புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு சாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லை என்றால்
நான் என்றோ…… என்றோ இறந்திருப்பேன்!!!
உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள் மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில்
இது எவனோ அனுப்பும் ஆறுதலா…
எந்தன் சோகம் தீர்வதற்கு
இது போல் மருந்து பிறிதில்லையே
அந்த குழந்தையைப்போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனகில்லையே!!!
காதலை நான் நேசிக்கிறேன்.
ஏன் என்று பிறகு சொல்கிறேன் .he hee hee he
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி
எனக்கும் பிடித்த பாடல்